உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

நடுவீரப்பட்டு பகுதியில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள் வீணாகிறது

நடுவீரப்பட்டு:

                  நடுவீரப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 லட்சம் செலவில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பயன்படுத் தாமல் வீணாகி வருகிறது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தலா 2 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

              நடுவீரப்பட்டு ஊராட்சியில் கைலாசநாதர் கோவில் எதிரில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்படுத்த தயங்குகின்றனர். அரசு அதிகாரிகள் ஒவ்வொரு அரசு கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்த பிறகுதான் கட்ட நடவடிக்கை எடுக்கின்றனர். அப்படி இருந்தும் எப்படி இங்கு கட்ட அனுமதி அளித்தனர். சி.என்.பாளையத்தில் உள்ள சுகாதார வளாகம் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
                அதற்கான மின் இணைப்புக்கான பணம் கட்டுவது சம்பந்தமாக மகளிர் மன்ற நிர் வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் மின்சாரம் இல்லாமல் தற்போது பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.முத்துகிருஷ்ணாபுரத் தில் உள்ள சுகாதார நிலையம் திறப்பு விழா காணாமலேயே முட்புதர்களால் மூடப்பட்டு வீணாகி வருகிறது. இப்பகுதி மக்கள் அதன் அருகில் ரோட்டையே பொது கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்திற்கு சில நூறு செலவு செய்தாலே மக்கள் பயன்பாட்டிக்கு வரும் நிலையில் உள்ளதை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior