உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு:மங்கலம்பேட்டை த.மு.மு.க., முடிவு

விருத்தாசலம்:

                 மங்கலம்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது. மங்கலம்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் நடந்தது.

               ஜபருல்லா தலைமை தாங்கினார்.நகர தலைவர் அசன்முகமது, செயலாளர் லியாகத் அலி, பொருளாளர் கலிமுல்லா, துணை செயலாளர் முகமதுநஜீர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விரைவில் மங்கலம்பேட்டையில் நடைபெற உள்ள ஆம்புலன்ஸ் சேவை அர்ப்பணிப்பு விழா மற்றும் சாதனை விளக்க பொது கூட்டத்திற்கு வருகை தரும் மாநில பொது செயலாளர் ஹைதர் அலிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது,
               மங்கலம் பேட்டையில் 2 மணி நேரம் மின் தடையை விட கூடுதலாக 4 மணி நேரத்திற்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 23ம் தேதி மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior