உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

தொழுதூர் ஆறுமுகம் கல்லூரியில்நேனோ டெக்னாலஜி கருத்தரங்கு

ராமநத்தம்:

                   தொழுதூர் ஆறுமுகம் கல்லூரியில் தமிழ், இயற் பியல், வேதியியல் துறை சார்பில் முத்தமிழ் மன்றம், நேனோ டெக்னாலஜி கருத்தரங்கு நடந்தது.முத்தமிழ் மன்ற விழாவிற்கு தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ராஜபிரதாபன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை விரிவுரையாளர் மீனாட்சி வரவேற்றார்.

              இதில் நெய்வேலி ஜவகர் கல்லூரி தமிழ்த்துறை விரிவுரையாளர் தியாகராஜன், ஆறுமுகம் கல்வியியல் கல்லூரி முதல்வர் துரைஎழிலன் தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து விளக்கினர்.கல்லூரி இயக்குனர் மேஜர்குஞ்சிதபாதம், முதல்வர் அரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினர். விரிவுரையாளர் தேன் மொழி நன்றி கூறினார்.
                     இயற்பியல், வேதியியல் துறை சார்பில் நடந்த நேனோடெக்னாலஜி கருத்தரங்கிற்கு இயற்பியல் துறைத்தலைவர் ஆசைதம்பி வரவேற்றார். நெய்வேலி ஜவகர் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் கொளஞ்சிபாபு எதிர் வரும் காலத்தில் நேனோ டெக்னாலஜியின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.வேதியியல் துறைத்தலைவர் கொளஞ்சிநாதன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior