உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உண்டியல் உடைத்து திருட முயற்சி

திட்டக்குடி : 

                பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
 
               பெண்ணாடத்தில் அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், கோவில் பூட்டப்பட்டது.  இரவு காவலர் மீனாட்சி சுந்தரம் கோவிலில் படுத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை அம்மன் சன்னதி கதவு திறந்து கிடந்தது. அங்கிருந்த உண்டியல் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தை கம்பியால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனைக் கண்டு திடுக்கிட்ட இரவு காவலர் மீனாட்சி சுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.  இரவில் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து திருட முயன்றதும், அது முடியாமல் போனதால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரிய வந்தது. புகாரின் பேரில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், சப்- இன்ஸ் பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும்,  இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior