உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

இளம்பெண்ணை கடத்தியவர் கைது

சேத்தியாத்தோப்பு:

            இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது சென்றனர். சேத்தியாத்தோப்பை அடுத்த பெரியநற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் தமிழ்வாணி (17). சேத்தியாத்தோப்பு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நாகை மாவட்டம் சீர்காழி பச்சை மைதானம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் கோபால் (23).

                 இவர் சேத்தியாத்தோப்பில் உள்ள உறவினர் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.இந்நிலையில் தமிழ்வாணி கடந்த நவம்பர் 7ம் தேதி திடீரென காணாமல் போனார்.

               இதுபற்றி அவரது தந்தை சேகர், தனது மகள் தமிழ்வாணியை கோபால் கடத்தி சென்று விட்டதாக சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார் .அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் தமிழ்வாணி மற்றும் கோபாலை பிடித்தனர். தமிழ்வாணியை மருத்துவ சோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபாலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior