உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

விபத்தில் 11 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்க கோரிக்கை

புவனகிரி :

           பள்ளி வேன் குளத்தில் விழுந்த விபத் தில் 11 சிறுவர்களை காப்பாற்றி தன்னுயிரை இழந்த ஆசிரியை சுகந்திக்கு கல் பனா சால்வா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபால், சட்டஆலோசகர் குணசேகர் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: வீர, தீர செயல் புரிந்த பெண்மணிகளுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு கல்பனா சால்வா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த மாதம் வேதாரண்யத்தில் பள்ளி வேன் குளத்தில் மூழ்கியதில் 11 சிறுவர்களை காப்பாற்றி இறந்த ஆசிரியை சுகந்திக்கு தமிழக அரசு இந்தாண்டிற்கான கல்பனா சாவ்லா விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior