உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

பிரளயகாலேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க மனு

திட்டக்குடி :

                     பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க வேண்டுமென பா.ஜ., சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

                     பெண்ணாடத்தை சேர்ந்த பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராமகோடி தமிழக சட்டசபை மனுக்கள் குழு தலைவருக்கு அனுப்பியுள்ள மனு: பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரளயகாலேஸ்வரர் கோவில் குளத்தில் பல ஆண்டிற்கு முன் தெப் பத்திருவிழா நடந்துள்ளது. இங்கு பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் வருகின்ற கழிவுநீர் முழுவதும் இங்குதான் சேகரமாகிறது. தவிர திருக்குளத்தை சுற்றியுள்ள வீடுகளின் செப்டிங் டேங்க் குழாயை குளத்தில் விட்டுள்ளனர். இதனால் திருக்குளத்தின் புனிதத்தன்மை கெடுவதுடன் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பேரூராட்சி சார்பில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கோவில் குளம் அருகில் கட்டப்பட் டுள்ளது.


              இது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கலெக்டருக்கும், கடந்த ஜூன் மாதம் தமிழக பேரூராட்சிகள் இயக்குநருக்கும் மனு அனுப்பியுள்ளேன். எனவே நிலத்தடி நீரை பாதுகாக்கவும், கொசுவினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தவும் கோவில் குளத்தை சீரமைத்து மீண்டும் தெப்பத்திருவிழா நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior