உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

லாரி மீது வேன் மோதல்: 10 பேர் படுகாயம்

சிதம்பரம் :

                   சிதம்பரம் அருகே லாரி மீது வேன் மோதியதில் மேல்மருத்தூர் பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.
             
                  நாகை மாவட்டம், பூம்புகாரில் இருந்து மேல்மருத்துவார் கோவிலுக்கு நேற்று 5க்கும் மேற்பட்ட வேன்களில் பக்தர்கள் சென்றனர். சிதம்பரம் அடுத்த மணலூர் அருகே வேன்கள் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது முன்னால் சென்ற லாரி திடீர் பிரேக் போட்டதால் பின்னால் சென்ற வேன் லாரியில் மோதியது. அடுத்தடுத்து சென்ற வேன்களும் லேசான மோதலுடன் நின்றன.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மேல்மருவத்தூர் பக்தர் களான பூம்புகாரை சேர்ந்த வினோதினி (18), அமுதா (50), பூங்கொடி (21), பிரேமா (27), முத்துலட்சுமி (35), சித்ராபவுன்(30) உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior