உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

தாமதமின்றி காஸ் சிலிண்டர் வழங்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

விருத்தாசலம் :

       விருத்தாசலம் இண்டேன் காஸ் நிறுவனம் அரசு நிர்ணயித்துள்ள கால கெடுவுக்குள் தாமதமின்றி பதிவு செய்து பயனாளிகளுக்கு சிலிண்டர் வினியோகிக்க வேண்டும் என ஊழல் எதிர்ப்பு இயக் கம் கோரிக்கை விடுத் துள்ளது.

                 விருத்தாசலத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வள்ளுவன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விருத்தாசலம் நகரில் இயங்கி வரும் இண்டேன் காஸ் நிறுவனத்தில் பயனீட்டாளர்கள் தங்கள் தேவையை தொலைபேசி வாயிலாக பதிவு செய்ய இயலவில்லை. நிறுவனத்தின் தொலைபேசி தொடர்புகள் கிடைக்காததால் பயனீட்டாளர்கள் அதிருப்தி அடைவதுடன், காலதாமதமும் சேவை குறைபாடும் ஏற்படுகிறது.
பயனாளிகள் பதிவு செய்து 15 நாட்கள் கழித்துதான் காஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் தொலைபேசி மூலம் பதிவு செய்வதை முறைப் படுத்தி அரசு நிர்ணயித் துள்ள கால கெடுவுக்குள் தாமதமின்றி பதிவு செய்து வினியோகிக்க காஸ் நிறுவனத்தை கேட்டு கொள் வது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior