உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

நல்லூர் ஒன்றியத்தில் சமத்துவ பொங்கல் விழா

சிறுபாக்கம் :

                  நல்லூர் ஒன்றியத்தில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு கலைத்திறன் விளையாட்டு போட்டி நல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் செல்வபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் சேகர் முன்னிலை வகித்தார். இதில் இருபது ஊராட்சிகளை சேர்ந்த மகளிர்சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டு கோலம், பேச்சு, நாடகம், குழுப்பாட்டு ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மகளிர்சுய உதவிக்குழுவினருக்கு உதவி திட்ட அலுவலர் செல்வபெருமாள் பரிசு வழங்கி பேசினார். விழாவில் துணை ஆணையர் சீத்தாலெட்சுமி, ஆசிரியர்கள் பெரியசாமி, தணசேகரன், ஊராட்சி தலைவர்கள் அருள்தாஸ், பெரியசாமி, பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior