உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

தச்சக்காடு கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு முகாம்

பரங்கிப்பேட்டை :

           பரங்கிப்பேட்டை அருகே கால்நடை பாதுகாப்பு முகாம் நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத் தில் கால்நடை பாதுகாப்பு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கோபு தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் மாடுகளுக்கு  தடுப்பு ஊசி, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடல் புழு நீக்கம், சினை பரிசோதனை, மலட்டு நீக்குதல் உள்ளிட்ட நோய்களுக்கு டாக்டர் சுந்தரம் சிகிச்சை அளித்தார். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அசோகன், கால்நடை ஆய்வாளர் கண்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் தீனதயாளன், ராஜேந்திரன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior