உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

சாலை விரிவாக்க பணி மந்தம் மீதிக்குடிக்கு போக்குவரத்து தடை

கிள்ளை :

            சிதம்பரநாதன்பேட்டை -மீதிகுடி சாலை விரிவாக்க பணி கிடப்பில் போடப் பட்டதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பரங்கிப்பேட்டை ஒன்றியம் சிதம்பரநாதன்பேட்டை யை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பாட்டிற்காக மினி பஸ் இயக்கப்பட்டது. சிதம்பரநாதன்பேட்டை-மீதிகுடி வளைவில்  உள்ள  பாலம் பழுதடைந்ததால் ஆறு மாதத்திற்கு முன்பு இந்த வழியாக இயக்கப்பட்ட மினி பஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. குண்டும் குழியுமான இந்த சாலையை அகலப்படுத்தி தார்சாலை அமைக்க 54 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. மூன்று மாதத்திற்கு முன் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது. சாலை ஓரங்களில் கிராவல் மற்றும் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டது. கல்வெர்ட்டுகளை கட்ட தோண்டிய பள்ளத்தை உரிய காலத்தில் சரி செய்யாததால் அப்பகுதியில் சுமார் 60 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியவில்லை. பஸ் போக்குவரத்தின்றி அப்பகுதி மக் கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத் திற்கு உள்ளாகியுள்ளனர். சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior