உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

தஞ்சையில் காலவரையற்ற உண்ணாவிரதம் : வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

திட்டக்குடி :

               பெண்ணாடத்தில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

             மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங் கினார். மாவட்ட செயலாளர் ராயதுரை முன் னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வீராசாமி வரவேற்றார். இதில் பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு மூப்பு பட்டியலை உடனே வெளியிட வேண்டும். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பதிவை சரி பார்த்து பட்டியலை வெளியிட வேண்டும். தமிழாசிரியர்கள் 3 ஆயிரத்து 875 பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களை உடனே நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28ம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தமிழ் பட்டதாரி சங்க நிர்வாகிகள் சபாநாயகம், கணேசன், சரவணன், கருப்புசாமி, ஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior