உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

கண்டமத்தான் ஊராட்சியில் அறிவு திறன் வளர்ப்பு போட்டி

ராமநத்தம் :

               ராமநத்தம் அடுத்த கண் டமத்தான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலக அறிவு திறன் வளர்ப்புக் கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

                      ஊராட்சி தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பச்சையம்மாள், துணைத் தலைவர் சிவலிங்கம், தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் முன்னிலை வகித் தனர். உதவியாளர் முத்தழகன் வரவேற்றார். அறிவுத்திறன் போட் டியை ஒன்றிய பணிப் பார்வையாளர் நக்கீரன் துவக்கி வைத்தார். போட்டியில்  நினைவுத்திறன், வரைபடத்தில் இடம் சுட்டி காட்டுதல், கவிதைப் போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்டவைகளை ஆசிரியர்கள் விஜயபாஸ்கர், வீரமணி நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங் கப்பட்டது.  விழாவில் ஆசிரியர்கள் தனபால், நடராஜன், கோமதி, பிரியா, பிரபு, மங்களேஸ் வரன், நூலகர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior