உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

இருதய நோய் கண்டறியும் முகாம்

கடலூர் :

                 கடலூர் செல்லங்குப் பத்தில் இலவச இருதய நோய் கண்டறியும் முகாம் நடந்தது.

                கடலூர் பாடலி சிட்டி அரிமா சங்கம், டாக்டர் செரியன் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு சங்க தலைவர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். இயக்குனர் கோதாவரி வரவேற்றார். மாவட்ட துணை ஆளுநர் கல் யாண்குமார், முன்னாள் மாவட்ட ஆளுனர் திலகர்  முன்னிலை வகித்தனர். இணை இயக்குநர் மீரா, பாடலி சங்கர், மண்டலத் தலைவர் சந்திரசேகர், வட் டார தலைவர் மோகன், கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பால்சேவியர், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் செரியன் ஹார்ட் பவுன்டேஷனைச் சேர்ந்த டாக்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று, இ.சி.ஜி., ரத்த அழுத்தம், ரத்தப்பரிசோனை உள்ளிட்ட இருதய நோய் கண்டறியும் சிகிச்சைகளை மேற் கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior