உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

ஜெயராம் கல்லூரியில் ரத்ததான முகாம்

கடலூர் :

                 கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. செஞ்சுருள் சங்கம் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் நடந்த முகாமிற்கு செல்விபாரதி வரவேற்றார். கல் லூரி துணை முதல்வர் ராமலிங்கம், சிறப்பு அலுவலர் ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா முன் னிலை வகித்தனர். முகாமை கல்லூரி தாளாளர் சேகர் துவக்கி வைத்து பேசினார். சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் சுகந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாணவர்களை பரிசோதித்து ரத்த தானம் பெற்றனர். மோலாண்மை துறை தலைவர் நடனமூர்த்தி, பாலகிருஷ்ணன், செஞ்சுருள் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகள்  பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior