உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

சட்டசபை, லோக்சபாவில் இட ஒதுக்கீடு : மாற்றுத்திறனாளிகளின் நலச்சங்கம் வலியுறுத்தல்

திட்டக்குடி :

          திட்டக்குடியில் அரசுப்பணி மாற்று திறனாளிகள் நலச்சங்க மாவட்ட கருத்தரங்கில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து படி வழங்கிட பரிந்துரைக்கப்பட்டது.

               மத்திய, மாநில அரசுப்பணி மாற்று திறனாளிகளின் மாவட்ட கருத்தரங்கு திட்டக்குடியில் நடந் தது. மாநிலத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொன்னுசாமி, மாநில செயலாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் அண்ணாத்துரை வரவேற்றார். கிராம உதவியாளர்  சங்க தலைவர் கந்தசாமி தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். காலிப்பணியிடங்களில் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சதவீதம் கட்டாயம் வழங்க அரசாணை பிறப் பித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பதவி உயர்வில் 3 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும். ஊனமுற்றோர்களுக்குபோக்குவரத்து படி வழங்க வேண்டும்.  வீடு கட்டவும், வீடு வாங்கவும் கடனுதவி வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சட்டசபை, லோக்சபாவில் ஊனமுற்றோருக்கு 3 சதவீதம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் சித்த மருத்துவ அலுவலர் கோபால், பொறியாளர் வெங்கடேஷ், பெருமாள், விரிவுரையாளர் ராஜா, நில அளவைத்துறை கவிதா, மணிமேகலை உட்பட உடல் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior