உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

விவசாயிகளுக்கு நிவாரணம் மாஜி எம்.பி., கோரிக்கை

சிறுபாக்கம் :

          மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாஜி எம்.பி., கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வருவாய் துறை அமைச்சர்கள் பெரியசாமி, பன்னீர்செல் வம் ஆகியோரிடம் கொடுத்த மனு: மங்களூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தங்களின் மானாவாரி நிலங்களில் மக்காசோளம், பருத்தி, மல்லி, மணிலா, தோட்டக்கலை பயிர் களான மஞ்சள், மரவள்ளி பயிரிட்டுள்ளனர். அறுவடை நேரத்தில் கனமழை பெய்ததால் பயிர் கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அடுத்த பயிரிட முடியாத நிலையில் உள்ளனர். எனவே, வருவாய் மற்றும் வேளாண் துறை அலுவலர்களை கொண்டு கணக் கெடுப்பு செய்து மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior