உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

த்தாழை, காவாளக்குடியில் நூலக அறிவுத்திறன் போட்டி

சேத்தியாத்தோப்பு :

                   சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழையில் நூலக அறிவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

               கத்தாழை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலக அறிவுத்திறன் மற்றும் உடற்திறன் போட்டிகள் நூலக வளாகத்தில் நடந்தது. புவனகிரி பி.டி.ஓ., ஜமுனா போட்டியை துவக்கி வைத்தார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஊராட்சித் தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். கூடுதல் பி.டி.ஓ., பூராசாமி, தலைமை ஆசிரியர்கள் சுந்தரமூர்த்தி, ஜாக்குலின் முன்னிலை வகித்தனர். ஊராட்சி எழுத்தர் சிற்றரசன் வரவேற்றார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. ஊராட்சி துணைத் தலைவர் சித்ரா, உறுப்பினர்கள் விஜயவேல், நாகஜோதி, ஜெயராமன், லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலகர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
காவாளக்குடி: காவாளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு ஊராட்சித் தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சங்கர், ஆசிரியர்கள் கோப்பெருந்தேவி, இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் கொளஞ்சி, செந்தாமரைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior