உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

பாம்புகளின் புகலிடமானது பொதுப்பணித்துறை கட்டடம்

கிள்ளை :

             பாம்புகளின் புகலிடமாகி வரும் இடிந்து விழுந்த பொதுப்பணித்துறை கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.

                சிதம்பரம் அடுத்த மேலச்சாவடியில்  கான்சாகிப் வாய்க்காலில் உள்ள தண்ணீரை விவசாய பாசனத்திற்கு ஏற்ப திறந்து விடவும், மழைக் காலத் தில் தேங்கும் நீரை கடலில் திறந்து விட சிதம்பரம் கொடிப்பள்ளம் சாலையில் மேலச்சாவடியில் குடியிருப்பு பகுதியில் பொதுப் பணித்துறை சார்பில் லஸ் கர் அலுவலகம் கட்டப் பட்டது. இங்கு பணியாற்றிய லஸ்கர் ஓய்வு பெற்றதில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி  பூட்டிக் கிடந்த கட்டடம் இடிந்து விழுந்து புதர் மண் டியுள்ளது.  இந்த கட்டடத்தில் பாம்புகள் நடமாட் டம் அதிகமாக இருப்பதால் சுற்றுப்பகுதியில் குடியிருப்பவர்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். எனவே இடிந்து விழுந்துள்ள கட்டடத்தை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 கருத்துகள்:

  • Selvam says:
    28 டிசம்பர், 2009 அன்று PM 12:43

    Hi, your blog is super, please Update Other details

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior