கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007,
பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி மற்றும் மருத்துவமனைக் கழிவுநீர் கலந்து கறுப்பு நிறமாகக் காட்சியளசிதம்பரம்: சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி...
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே மணல் கடத்திய லாரிகளைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.பண்ருட்டி அருகே கன்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் நடப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, இன்று அதிகாலை 3 மணிக்கு வட்டாட்சியர் ஆர்.பாபு, வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி ஜோதிமணி உள்ளிட்டோர்...
ஸ்மார்ட் கார்டு முறை மூலம், வாகன உரிமம், வாகன பதிவுச் சான்று (ஆர்.சி.) வழங்கும் நடைமுறை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
...
கடலூர்:
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்ததால், தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு இருந்த 674 கணினி ஆசிரியர்கள் புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1999 முதல், 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு தனியார்...
கடலூர்:
திட்டக்குடி வட்டம் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேளாண் கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. நல்லூர் ஒன்றியத்தில் உள்ள 15 டான்வா மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வயல்களில் களை எடுக்கும் கோனோ வீடர் கருவிகள், நெல்நடவு செய்யும் மார்கர் கருவிகள் ஆகியவற்றை, கடலூர் மண்டல வேளாண் அலுவலர் கிருஷ்ணராஜ் வழங்கினார். வேளாண் கருவிகளின்...
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்யப்போவதாக ஒன்றியக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர். பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவர் கெüரிபாண்டியன் தலைமையில், துணைத் தலைவர் எம்.சம்மந்தம் முன்னிலையில் அலுவலக வளாகத்தில்...
CUDDALORE:
Officials will soon be making door-to-door verification in regard to addition (Form 6), deletion (Form 7) and alterations (Form 8) in the electoral rolls, according to Collector P. Seetharaman. In a statement released here, the Collector requested people to cooperate with the officials. They should also keep ready two passport size photographs, and age and residential proof...
கடலூர்:
கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் வியாழக்கிழமை மாலை 7-25க்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்தது. வண்டி புறப்பட்டுச் சென்றதும் ரயில்வே கேட்டைத் திறக்க முடியாமல்...
மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரயில் பாதையில் முறைப்படி மே 10 ம் தேதி ரயில் போக்குவரத்தை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்' என, எம்.எல்.ஏ., ராஜகுமார் தெரிவித்தார். விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கிலோ மீட்டர் தூரமிருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை, 2006ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதே ஆண்டு...
கடலூர்:
மின்தடை காரணமாக கடலூர் நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. கடலூர் நகருக்கு கேப்பர் மலை துணை மின்நிலையம், நத்தப்பட்டு துணை மின்நிலையம் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. கேப்பர் மலைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு கடலூருக்கு குடிநீர்...
நெய்வேலி:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மின்சாரம் தயாரிக்கின்ற தலையாய பணியைச் செய்து, கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு ஒளி வீசி வருகிறது. எனவே மின்சாரத்தை தயாரிக்கவும் அதற்கு தேவையான பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுக்கவும் நிலம் கையகப்படுத்துவது அவசியமானது என்றார் கடலூர்...
கடலூர்:
பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை கடலூர் வருகிறார்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட பா.ஜ.க. அமைப்பாளர் க.எழிலரசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1-5-2010...
கடலூர்:
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 1,63,729 குடிசை வீடுகளில் கணக்கெடுப்புப் பணிகள் இதுவரை நிறைவுபெற்று இருப்பதாக, மாவட்ட ஆட்சிய பெ.சீதாராமன் தெரிவித்தார்.
ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலைஞர் வீட்டு...
பரங்கிப்பேட்டை:
புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் ரூ. 27 லட்சத்தில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது.புதுச்சத்திரத்தை சுற்றி 49 கிராமங்களை உள்ளடக்கி கடந்த 1983ம் ஆண்டு போலீஸ் நிலையம் துவங்கப்பட்டது. அன்று முதல் போலீஸ் நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சிறிய இடமான அந்த போலீஸ்...
சிறுபாக்கம்:
நல்லூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஊராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் ரவிசங்கர்நாத் தலைமை தாங்கினார். திட்ட ஆணையர் சுலோசனா முன்னிலை வகித்தார். துணை ஆணையர் வீரபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளான குளம்...
திட்டக்குடி:
மங்களூர் ஒன்றியத்தில் தேசிய பெண்கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாதிரி தொகுப்பு மையங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மங்களூர் ஒன்றியத்திலுள்ள 107 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பெண்கல்வி திட்டத்தின் கீழ் 29 மாதிரி தொகுப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ஒவ்வொரு மையத்திலிருந்தும்...
விருத்தாசலம்:
முழுநேர பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக நலத்துறை மான்ய கோரிக்கையில் நிறைவேற்றகோரி தமிழ் நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜய பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:
...
திட்டக்குடி:
பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை கோரி சேர்மன் அமுதலட்சுமி அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனு:
...
கடலூர்:
மோட்டார் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் இறந்தார். கடலூர் கம்மியம்பேட்டையில் வசித்தவர் எலட்ரீஷியன் ராஜேந்திரன் (48). இவர், நேற்று இரவு 8.30 மணியளவில் போடி செட்டித்தெருவில் வசிக்கும் செல்வம் வீட்டில் மின் மோட்டார் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.உயிருக்கு...
சிதம்பரம்:
சிதம்பரம் போலீஸ் நிலையத்தை கண்ணங்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் பிரம்மராயர் கோவில் தெரு ராஜேஷ் (18). கவுதமன்(36). நண்பர் களான இருவரும் பைக் கில் சென்ற போது, சின்னக்கடை தெருவில் நின்றிருந்த கண்ணங்குடி சிவக்குமார் வழி மறித்து தன்னை தாக்கியதாக ராஜேஷ் சிதம்பரம் டவுன்...
கடலூர்: மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே அகல ரயில்பாதைத் திட்டமானாலும் அதன்பிறகு ரயில்கள் இயக்கம் ஆனாலும், ரயில்வே துறையின் செயல்பாடுகள் கடலூர் மாவட்ட மக்களைப் புறக்கணிப்பதாக...
பண்ருட்டி: ஒரு கிலோ வெள்ளரி விதை ரூ.100 வரை விலை போவதால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைப்பதாக வெள்ளரி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பண்ருட்டி வட்டத்தில்...
சிதம்பரம்:
இயற்கையின் பலவிதமான அற்புதங்களில் சீனித்துளசி தாவரம் மிகவும் முக்கியமான மருத்துவ தாவரமாக திகழ்கிறது. சீனித்துளசி கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிகமாக இனிப்புச் சுவையை கொண்டிருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுவது ஆச்சரியமளிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை உபயோகிக்க முடியாத நிலையில் இந்த சீனித்துளசியிலிருந்து...
புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலான 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மே 2-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
...
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
...
பண்ருட்டி:
புதுப்பேட்டை ஸ்வாசிகா இயக்கம் சார்பில் கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் பண்ருட்டியில் உள்ள திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியில் மே 1 முதல் 10-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஓவியக் கலையின் பல்வேறு நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படும். பதிவுக் கட்டணம் ரூ.20 செலுத்தி பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்...
நெய்வேலி:
பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது என நெய்வேலியில் நடைபெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தி.க.தலைவர் கி.வீரமணி பேசினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பில் நெய்வேலி லிகனைட் ஹாலில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான வாகைச் சூட வாரீர் எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில்...
சிதம்பரம் :
சிதம்பரம் அருகே சீர்காழி மெயின் ரோட்டில் குறுகலான பாலத்தில் பஸ்சும், லாரியும் உரசி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து தடைபட்டது.
தென்மாவட்ட பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட...
சிதம்பரம் :
சிதம்பரம் வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பி.முட்லூர்- சிதம்பரம் வரை புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் புறவழிச் சாலை பணி 2004ம் ஆண்டு துவங்கி தற்போது தான் ...
திட்டக்குடி:
வெள்ளாறு திறந்தவெளி 'டாஸ் மாக்' பாராக மாறி வருவதால் பெண்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திட்டக்குடி நகர் புறத்தில் தாலுகா அலுவலகம் முன்புறம், பெருமுளை ரோடு செல்லும் வழி, கூத்தப்பன்குடிக்காடு ஆகிய மூன்று இடங்களில் அரசு...
கீரப்பாளையம்:
சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேரடியாக வந்து சென்ற பெருமைக்குரிய கீரப் பாளையம் ஊராட்சியில் தற்போது அனைத்து வளர்ச் சித் திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் முடங்கிப் போய்யுள்ளது.
சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம்...
பண்ருட்டி :
பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர் மன்...
கடலூர் :
ரேஷன் கார்டுதாரர்கள் அனைத்து மாதங்களிலும் பொருள்கள் வாங்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது என கலெக்டர் கூறியுள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:
ரேஷன் கார்டில் தொடர்ந்து மூன்று மாதங் களாக பொருள்கள் வாங் காமல் இருந்தால் அந்த...
கடலூர் :
கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் 4.38 கோடி ரூபாயில் நவீன தொழில் நுட்பத்துடன் வேகமாக தயாராகி வருகிறது.
கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் போக்குவரத்து,...
கடலூர் :
தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மே முதல் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்....
கடலூர் :
பராமரிப்பு பணிக்காக நேற்று கடலூரில் காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்ததால் அரசு அலுவலகங்களில் பணிகள் முற்றிலுமாக பாதித்தது. மின்சாரம் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மின் வாரியம் சென்னை தவிர்த்து மாநிலத்தில்...
பண்ருட்டி :
புதிய காஸ் இணைப்பு பெறும் போது அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கத் தேவையில்லை என பாரத் காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல துணை மேலாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
பண்ருட்டியில் உள்ள காஸ் ஏஜன்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பாரத் காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல துணை மேலாளர் முத்துசாமி கூறியதாவது:
...
கடலூர் :
விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் செல்லும் புதிய ரயில்கள் கடலூரில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் கடந்த 24ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில்...
பண்ருட்டி :
பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் நெல், உளுந்து விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.
பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் ஏ.டி.டி., 45 ரகம் நெல் 50 சதவீத மானிய விலையில் ஒரு கிலோ 9 ரூபாய்க்கு...
கடலூர் :
ராமாபுரத்தில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 1,170 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நீர் வள நில வள மேம்பாட்டுத் திட்டத்தில் கால்நடைகளுக்கு மலட்டுத் தன்மை நீக்கல் சிறப்பு மருத்துவ முகாம் கடலூர் அடுத்த ராமாபுரம் ஊராட்சியில் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை...
சிதம்பரம் :
இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக ஆரோக்கிய தின விழா கொண்டாடப்பட்டது.
வேளாண் புல தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளார் டார்வின் கிறிஸ் துதாஸ் ஹென்றி வரவேற்றார். ராஜா...
பண்ருட்டி :
பண்ருட்டி அடுத்த காவனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.
ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கந்தசாமி பொதுமக்களின் மனுக்களை பெற்றார். ஊராட்சி தலைவர் தட்சணாமூர்த்தி முன் னிலை வகித்தார். முகாமில் பட்டா மாறுதல், முதியோர்...
சிதம்பரம் :
மஞ்சக்கொல்லை கிராமத்தில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி தண்டபாணி சுவாமி வீதியுலா நடந்தது.
புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி கோவிலில் 95ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா கடந்த 19ம் தேதி கொடியேற் றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக...
கடலூர் :
கடலூரில் உள்ள அனைத்து கோவில் சொத் துக்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. கடலூர் நகர பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் புதுப்பாளையத்தில் நடந்தது. தாமரை வெங்கடேசன்...
சிறுபாக்கம் :
மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்களின் அவசர கூட்டத்தில் மானிய நிதியில் தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்தாய்வு நடந்தது.
மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்களின் அவசர கூட்டம், ஒன்றிய வளா கத்தில் நடந்தது. சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை சேர்...