உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

ஒரே நாளில் 20 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்

நடுவீரப்பட்டு : 

                 கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.என். பாளையத்தில் வெறி நாய் கடித்ததில் 20க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.

                    பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் கடந்த சில நாட்களாக நாய் தொல்லை அதிகரித்துள்ளது. அப்பகுதியில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் என எவரையும் விட்டு வைக்காமல் துரத்திச் செல்வது வழக்கம். இதில் ஒரு சில வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20க்கும் மேற்பட்டவர் களை வெறி நாய் ஒன்று கடித்து குதறியது. இதில் கச்சிராயர்குப்பத்தைச் சேர்ந்த தனசேகர், நடுப்பேட்டை சங்கர், பெருமாள், மகாலட்சுமி, தண்டபாணி உள்ளிட்ட 20க் கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். நாய் கடிக்கு ஆளான அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior