உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் குடுமியான்குப்பம் ஊராட்சி

பண்ருட்டி:

                குடுமியான்குப்பம் ஊராட்சி காலனி பகுதியில் அடிப் படை வசதிகள் இன்றி பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

                 பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் ஊராட்சியில் ஏ.காலனி பகுதியில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1980ம் ஆண்டு கட்டப் பட்ட 30 தொகுப்பு வீடுகள் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. தற்போது ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட சின்டெக் டேங்க் மூலம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 8 மணிவரை குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் மாலை நேரங்களில் குடிநீர் வழங்குவதில்லை. 100 குடும்பத்தினருக்கும் சிறிய டேங்கில் இருந்து குடிநீர் வழங்குவதால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக் குறை தலைவிரித்தாடுகிறது. இப்பகுதிக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டித்தர கோரிக்கை விடுத் தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பிட்ட இப்பகுதிக்கு மட்டும் முக்கியத் தேவையான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், ஊராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இதுபற்றி ஏ.காலனியை சேர்ந்த ராமலிங் கம் கூறுகையில், 

                      "1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய சின்டெக் டேங்க் மூலம் தண்ணீர் சப்ளை செய்வதால் குடிநீர் பற்றாக் குறை உள்ளது. தெருவிளக்கு, சுடுகாட்டுப் பாதை இல்லை. இங்குள்ள மக்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்கவில்லை. இதனால் தமிழக அரசின் "கான்கிரீட்' வீடு திட்டத்தில் இப்பகுதி மக்கள் பயன்பெற முடியாத நிலை உள்ளது. தொகுப்பு வீடுகளும் சிமென்ட காரைகள் பெயர்ந்து வீணாகியுள்ளது' என்றார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior