உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் மாணவர் அவதி

பண்ருட்டி : 

                பிளஸ் 2 தேர்வு முடிவு குளறுபடி காரணமாக மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் பண்ருட்டி மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

                  பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த மே 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இன்டர்நெட்டில் வெளியான தேர்வு முடிவில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சந்தோஷ்குமார் (எண் 596361) இயற்பியல் தியரி மதிப்பெண் போடப்படாமல் இருந்தது. இதுகுறித்து மாணவர் தரப்பில் பள்ளிக்கல்வி இயக்குனர், தேர்வுத்துறை, கடலூர் சி.இ.ஒ., ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டது. அதற்கு அனைவரும் மதிப்பெண் பட்டியலில் வரும் என தெரிவித்தனர். ஆனால் மதிப்பெண் பட்டியல் கடந்த 26ம் தேதி வழங்கப்பட்ட நிலையில் மாணவர் சந்தோஷ்குமாருக்கு மட்டும் மதிப்பெண் பட்டியல் வரவில்லை.

                 இதுகுறித்து மீண்டும் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் சென்று முறையிட்டும் முறையான பதில் இல்லாததால் மாணவர் சந்தோஷ்குமார் மேற்கொண்டு என்ன படிப்பது. அல்லது மீண்டும் தேர்வு எழுத வேண்டுமா? என்பது குறித்து பல குழப்பங்களுடன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior