உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

சினிமா பாணியில் போலீஸ் புகுந்ததால் சிதம்பரம் தேர்வு மையத்தில் பரபரப்பு

சிதம்பரம் :

              தேர்வு எழுதி விட்டு வந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்ததால் தேர்வு மைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

                 கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் ஜவகர். ஸ்ரீமுஷ்ணம் பி.எட்., கல்லூரி மாணவர். இவர் அதே கல்லூரியில் பார்மசி படித்த விருத்தாசலம் பெண் ஒருவரை காதலித்தார். இந்நிலையில் அந்த பெண் கடத்தப்பட்டுள்ளார். விருத்தாசலம் போலீசில் பெண்ணின் பெற்றோர் ஜவகர் கடத்திச் சென்றதாக புகார் கொடுத்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஜவகர், சிதம்பரம் கல்லூரியில் நேற்று தேர்வு எழுத வந்திருப்பது தெரியவந்தது. தேர்வு முடிவதற்கு 20 நிமிடங்கள் முன்பாகவே விருத்தாசலம் மற்றும் கிள்ளை போலீசார் தேர்வு நடந்த கல்லூரியை முற்றுகையிட்டனர்.

                     தேர்வு முடிந்து அனைத்து மாணவ, மாணவிகளும் வெளியேறிய பிறகும் ஜவகர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மற்றும் பெண்ணின் உறவினர்கள் கல்லூரிக்குள் சென்று தேடினர். இதனால் தேர்வு மையம் பரபரப்படைந்தது. கல்லூரி மொட்டை மாடியில் பதுங்கியிருந்த ஜவகரை போலீசார் அழைத்துச் சென்றனர். தேர்வு மையத்தில் போலீசார் சினிமா பாணியில் திபு, திபுவென ஓடியதால் தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்த மாணவ,மாணவிகள் பீதியடைந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior