உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

கத்தாழை கிராமத்தில் நூலக கட்டடம் திறப்பு விழா

சேத்தியாத்தோப்பு : 

                    கத்தாழை கிராமத்தில் நூலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. புவனகிரி ஒன்றியம், கத்தாழை கிராமத்தில் 3 லட்சம் ரூபாய் செலவில் நூலக கட்டடம் கட் டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமுனா, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். நூலகர் ராமச்சந்திரன் வரவேற்றார். புவனகிரி ஒன்றிய சேர்மன் தனலட்சுமி நூலக கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior