உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

காடாம்புலியூர் அருகே அழகப்பசமுத்திரத்தில்குறிஞ்சி மழலையர் பள்ளி திறப்பு விழா

கடலூர் : 

               காடாம்புலியூர் அருகே அழகப்பசமுத்திரத்தில் குறிஞ்சி மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியை எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

                 காடாம்புலியூர் அடுத்த அழகப்பசமுத்திரத்தில் குறிஞ்சி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி திறப்பு விழா நடந்தது. ரட்சகர் தலைமை தாங்கினார். புதிய பள்ளி கட்டடத்தை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் திறந்து வைத்து பேசினார். ஆசிரியர் ஜான்போஸ்கோ வரவேற்றார். பெருமாள், அறக்கட் டளை தலைவர் ஜெயந்தி, செயலாளர் கலாராணி குத்துவிளக் கேற்றி வைத்தனர். உறுப் பினர்கள் சாந்தி, அமுதா, வித்யா, மஞ்சுளா, சுதா முன்னிலை வகித்தனர்.

                 விழாவில் என்.ஜி.ஓ., சங்க மாநில நிர்வாகி கார்மேகவண்ணன், மாவட்ட தலைவர் செல்வம், வன்னியர் சங்க துணைத் தலைவர் திருமால்வளவன், கவுன்சிலர்கள் ராஜா, சுப்ரமணியன், ஊராட்சி தலைவர் ஆரோக்கியதாஸ், கோதண்டராமன், ஓய்வு பெற்ற மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், கிரீடு நடனசபாபதி, டாக்டர் கலைநேசன் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை குறிஞ்சி மழலையர் பள்ளி உறுப்பினர்கள் பூங்கொடி, ருக்மணி, ஆர்த்தி, ஜெயந்தி, லட்சுமி, முத்துலட்சுமி, மைதிலி, ஜெயந்தி, ராஜலட்சுமி, ரேணுகாம்பாள் ஆகியோர் செய்திருந் தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior