உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

தனியார் தோண்டிய பள்ளத்தால் "ஹைமாஸ்' கேபிள் துண்டிப்பு

கடலூர் : 

               தனியார் தோண்டிய பள்ளத்தால் ஹைமாஸ் விளக்குகளின் கேபிள் துண்டிக்கப்பட்டதால் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் கடந்த 40 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது.

                   கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள நகராட்சி மைதானத்தில் மாலை நேரங்களில் முதியோர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருவதோடு, இளைப்பாறியும் வருகின்றனர். பொதுமக்கள் பயன் பாட்டில் உள்ள மைதானம் இருள் சூழ்ந்து காணப்பட் டதால் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அறங் கேறின. இதனை தடுக்கும் பொருட்டு நகராட்சி ஐந்தாண்டிற்கு முன் "ஹைமாஸ்' விளக்கு அமைத்தது. இதனால் சமூக விரோத செயல்கள் குறைந்தன. மேலும் மைதானத்திற்கு மாலை நேரத்தில் இளைப்பாற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிறுவனம் ஒன்று நகராட்சியின் அனுமதி பெற்று மைதானத்தில் பொருட்காட்சி நடத்தியது.

                      அரங்குகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான சாதனங் கள் மட்டுமே அமைக்க அனுமதி பெற்ற தனியார் நிறுவனம் படகு சவாரி நடத்துவதற்காக மைதானத்தில் ஒரு பகுதியில் மிகப் பெரிய அளவில் பள்ளம் தோண்டியது. அதில் மைதானத்தில் உள்ள "ஹைமாஸ்' விளக் கிற்காக பூமிக்கடியில் கொண்டு செல்லப்பட்ட மூன்று கேபிள்கள் அறுந்ததால், பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் அன்று முதல் "ஹைமாஸ்' விளக்கு எரியாமல் கடந்த 40 நாட்களுக்கு மேலாக நகராட்சி மைதானம் இருளில் மூழ்கி கிடக்கிறது. துண்டிக்கப்பட்ட கேபிள்களை இணைக்க முடியாது என்பதால் புதிதாக மாற்ற வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. இதனால் "ஹைமாஸ்' விளக்கு பழுது நீக்க தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து சேர்மன் தங்கராசிடம் கேட்டபோது 

                     "கேபிள் சேத தொகை பொருட்காட்சி நடத்தியவர்களிடமிருந்து வசூலிக்கப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior