உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆனி திருமஞ்சனம் துவக்கம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று துவங்குகிறது.

                  சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று (10ம் தேதி) கொடி யேற்றத்துடன் துவங்குகிறது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. தினமும் காலை பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, இரவு சுவாமி வீதியுலா நடக்கி றது. 11ம் தேதி வெள்ளி சந் திரபிரபை வாகனம், 12ம் தேதி தங்க சூரிய பிரபை, 13ம் தேதி வெள்ளி பூத வாக னம், 14ம் தேதி தெருவ டைச்சான், 15ம் தேதி வெள்ளி யானை வாகனம், 16ம் தேதி தங்க கைலாச வாகனம், 17ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி யுலா நடக்கிறது. தேர்த்திருவிழா 18ம் தேதி நடக்கிறது. தேர் நிலைக்கு வந்ததும் அன்று இரவு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு லட்சார்ச்சனை, 19ம் தேதி அதிகாலை மகா அபிஷேக மும் நடக்கிறது. தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சியும், 12 மணிக்கு பஞ் சமூர்த்திகள் வீதியுலா முடிந்த பிறகு ஆனி திரு மஞ்சன தரிசனம் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior