உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

பிச்சாவரம் படகு ஓட்டுனர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

கிள்ளை : 

                 பிச்சாவரம் சுற்றுலா மைய படகு ஓட்டுனர் களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் 1984ம் ஆண்டு படகு சவாரி துவங்கியது. இங்கு 35 படகு ஓட்டுனர்கள் பணியாற்றி வருகின்றனர். 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை இயக்குநருக்கு கோரிக்கை வைத் துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள மனு: 

                  சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது. மழை மற்றும் வெயில் காலத்தில் மிகவும் சிரமப்பட்டு படகுளை ஓட்டிச் சென்று சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கின்றோம். இதனால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. எனவே தற்போது சுற்றுலா மையத்தை தனியாரிடம் விடுவதாக அரசு எடுத்துள்ள முயற்சியை மறுபரிசீலனை செய்வதுடன், அனைத்து துறைகளிலும் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று கமிஷன் அடிப்படையில் பணியாற்றி வரும் 35 படகு ஓட்டிகளான எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior