உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு


            பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 14) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதைத்தொடர்ந்து 44 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. இப்போது மதிப்பெண் விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, சிடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்.எம்.எஸ். தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior