உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்

கடலூர் : 

               பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.

            தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில் 206 தமிழ் ஆசிரியர் கள், ஆங்கிலம் 1,625, கணிதம் 1,382, இயற்பியல் 857, வேதியியல் 856, உயிரியல் 367, விலங்கியல் 367, வரலாறு 550, புவியியல் 122 உட்பட 6,332 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று 12ம் தேதி துவங்கி, நாளை 14ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் நேற்று துவங் கிய சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் முதல் கட்டமாக 420 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இப்பணியை சி.இ.ஓ., அமுதவல்லி ஆய்வு செய் தார். தலைமை ஆசிரியர் தலைமையில் 5 பேர் கொண்ட 14 குழுவினர் சான்றிதழ்களை சரிபார்க் கும் பணியில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior