உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

விலைவாசி உயர்வே அரசின் சாதனை : தெருமுனை கூட்டத்தில் சம்பத் பேச்சு

நெல்லிக்குப்பம் : 

              விலைவாசி உயர்வே தமிழக அரசின் சாதனை என சம்பத் கூறினார். நெல்லிக்குப்பம் நகர அ.தி.மு.க., சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சவுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் சிறப்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன், மனோகர், ஜின்னா, சரவணன், ரங்கராஜன், ரவிசந்திரன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சம்பத் பேசுகையில் 

                'மின்வெட்டால் தொழில்கள் நலிவடைந்து தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வரலாறு காணாத அளவு விலை உயர்ந்துள்ளதே கருணாநிதி அரசின் சாதனை. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் தமிழக அரசுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அந்தளவுக்கு நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளது' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior