உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

கடலூர் மின்வாரியத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

கடலூர் : 

              கடலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

             கடலூர் புதுப்பாளையத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திருச்சி மின்வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர். அங்கு பணியில் இருந்த இளமின் பொறியாளர் திருவரசுவை டி.எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் தனி அறையில் வைத்து விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ரவிராம், கடலூர் புதுப்பாளையம் இளமின் பொறியாளர் திருவரசு ஆகியோர் நேற்று சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இச்சம்பவம் மின்வாரிய ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior