உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

நடராஜர் கோவில் உண்டியல் இன்று திறப்பு

சிதம்பரம் : 

             சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7வது முறையாக இன்று (13ம் தேதி) உண்டியல் திறக்கப் படுகிறது.

            சிதம்பரம் நடராஜர் கோவில் 2009ம் ஆண்டு பிப். 2ம் தேதி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. அதனையடுத்து கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டது. ஒரு உண்டியல் வைக்கப்பட்டு படிப்படியாக ஒன்பது உண்டியல்கள் வைக்கப்பட்டது. இந்த உண் டியல்கள் கடந்த மார்ச் 9ம் தேதி ஆறாவது முறையாக திறக்கப்பட்டது. இதுவரை உண்டியல் மூலம் வெளி நாட்டு பணம் மற்றும் நகைகள் நீங்கலாக 17 லட்சத்து 2 ஆயிரத்து 734 ரூபாய் வசூலாகியுள்ளது. இந்நிலையில் 7வது முறையாக இன்று (13ம் தேதி) உண்டியல் திறக்கப் படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior