உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி விவசாய பயிற்சி

நெல்லிக்குப்பம் : 

              இயற்கை வேளாண் விஞ்ஞானி சட்டையணியா சாமியப்பன் பயிற்சி அளித்தார்.

              நெல்லிக்குப்பத்தில் திருப்பூரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி சட்டையணியா சாமியப்பன் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளித்தார். 

பயிற்சியில் திருப்பூரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி சட்டையணியா  சாமியப்பன் பேசுகையில் 

                   'திருப்பூரில் ஆடம்பர ஆடை தயாரிக்க நிலத்தடி நீரை உறிஞ்சி கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலந்து நீரை பாழாக்குகின் றனர். இதை மக்களுக்கு உணர்த்தவே சட்டையணிவதை தவிர்த்தேன். வெள்ளை ஆடைகள் அணிவதால் முடிந்தவரை மண்ணை கெடுக்காமல் இருக்க முடியும். விவசாயத்துக்கு வெளியில் இருந்து இடுபொருட் கள் எடுத்துச் செல் வதை தவிர்க்க வேண்டும். நம் நிலத்தை சுற்றியுள்ள மரங் களின் இலைகளை மாட்டுச் சாணியோடு ஊறவைத்து பாசன நீரோடு அனுப்பலாம். மாட்டு சிறுநீர், சாணத்தை அதிகளவு பயன்படுத்த வேண்டும். நிலத்திலேயே அதிக மண் புழுக்களை வரவழைக்க முயற்சி செய்ய வேண்டும். மண்புழுக்களும், நுண்ணுயிர்களும் பெருகினால் நிலத்துக்கு வேறு உரங்கள் தேவையில்லை. ரசாயன உரங்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. பூச்சி மருந்துகளால் மனிதனை நோய்கள் தாக்குகின்றன. மேலும், அதிக செலவால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நம் நிலத்தில் உள்ளதை பயன்படுத்தி இயற்கையாக விவசாயம் செய்தால் மண்ணையும், சுற்றுசூழலையும் பாதுகாக்க முடியும்' என கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior