உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

அஞ்சலகங்களில் தங்க நாணயம் சிறப்பு விற்பனை

கடலூர் : 

           அக்ஷய திருதியை முன்னிட்டு அஞ்சலகங்களில் வரும் 16ம் தேதி முதல் சிறப்பு தள்ளுபடியில் தங்க நாணயம் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் விடுத் துள்ள செய்திக்குறிப்பு: 

                 இந்திய அஞ்சல் துறையும், ரிலையன்ஸ் மணி நிறுவனமும் இணைந்து கடலூர் கோட்டத்தில் கடலூர் மற்றும் சிதம்பரம் அஞ்சலகங்களில் கடந்த ஓராண்டாக 24 காரட் தங்க நாணயம் அரை கிராம், 1, 5 மற்றும் 8 கிராம் எடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தங்க நாணயங்களில் அஞ்சல் துறை முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். தற்போது அக்ஷய திருதியை முன்னிட்டு வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை அஞ்சலகங்களில் வாங்கப்படும் தங்க நாணயங்களுக்கு 6 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior