உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல கோரிக்கை

விருத்தாசலம் : 

            சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நிற்க வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: 

                திருச்சி ரயில்வே கோட்டத்தில் விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் முக்கியமானது. விருத்தாசலத்திலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். எனவே சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லவும், கடலூரில் இருந்து விருத்தாசலம், சேலம் வழியாக பெங்களூர் மற்றும் கோயமுத்தூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்க வேண்டும். கடலூரில் இருந்து விருத்தாசலம் வழியாக திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில் திருச்சி சென்றவுடன் எண் மாற்றம் செய்யப்பட்டு திருச்சி - பாலக்காடு டவுன் என்று பாசஞ்சர் ரயிலாக சென்று வருகிறது. அந்த ரயிலை கடலூரில் இருந்து பாலக்காடு டவுன் வரை இரு மார்க்கத்திலும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனின் முன்புறம் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior