உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வருக்கு கோரிக்கை

பண்ருட்டி : 

          பண்ருட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் காங்., கோரிக்கை விடுத்துள்ளது.

பண்ருட்டி தொகுதி இளைஞர் காங்., தலைவர் லிஸி ஜோஸ்பின் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

                பண்ருட்டி நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் பண்ருட்டியைச் சுற்றியுள்ள அங்குசெட்டிப்பாளையம், கண்டரக்கோட்டை, பூங்குணம், திருவதிகை பள்ளி மாணவிகள் மேல் நிலை படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டம், கட்டாய கல்வி திட்டம் ஆகியவை கொண்டு வந்துள்ள நிலையில் பண்ருட்டியில் அரசு மேல்நிலைபள்ளி இல் லாதது வருந்தத்தக்கது. கடந்த 20 ஆண்டுகால கோரிக்கையை கல்வித் துறை சிறிதளவு கூட பரிசீலனை செய்து பள்ளி ஏற்படுத்த முயற்சி எடுக்கவில்லை.  இதனால் ஒவ்வொரு ஆண்டும் 1,500 மாணவிகள் பள்ளி படிப்பை தொடர இயலாமல் வணிக நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் நிலை தான் உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டுமே சமத்துவ கல்வி வழங்கப்படுகிறது. முதல்வர் தனிகவனம் செலுத்தி வரும் கல்வியாண்டு முதல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இளைஞர் காங்கிரஸ் சார் பில் மாபெரும் போராட் டம் நடத்தப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior