உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

சுட்​டெ​ரிக்​கும் வெயில்: சில்வர் பீச்சில் அதிக கூட்டம்

கட​லூர்:

                     கட​லூ​ரில் புதன்​கி​ழமை வெயில் கடு​மை​யா​கச் சுட்​டெ​ரித்​தது.​ ​கடலூரில் சுனாமி பீதி​யு​டன் கத்​திரி வெயில் தொடங்கி இருக்​கி​றது.​ ஒரு வாரத்துக்கு முன் பெய்த கோடை மழை​யால்,​​ தொடக்​கத்​தில் வெப்​பம் குறைந்து காணப்​பட்​டது.​ எனி​னும் கத்​திரி வெயில் தொடங்​கி​ய​தும் வெயில் தகிக்​கத் தொடங்​கி​விட்​டது.​

                இப்​போதே வெளி​யில் தலை​காட்ட முடி​யாத அள​வுக்கு வெயில் சுட்டெரிக்​கத் தொடங்கி இருக்​கி​றது.​ கட​லோர நக​ர​மாக இருந்​த​போ​தி​லும்,​​ கட​லூ​ரில் வெயில் கடு​மை​யா​கவே உள்​ளது.​ எத்​தனை கடற்​காற்று வீசி​னா​லும் வெப்​பக் காற்​றின் தாக்​கத்தை ஒன்​றும் செய்ய முடி​ய​வில்லை.​ ​ மின் விசி​றி​கள் எவ்​வ​ளவு வேகத்​தில் சுழன்​றா​லும் வியர்​வைக் குளிய​லில் இருந்து மீள​மு​டி​யாத வெப்ப நிலை காணப்​பட்​டது.​ ​

                 க​ட​லூ​ரில் வெயில் அளவு 98 டிகி​ரி​யாக இருந்​த​போ​தி​லும்,​​ வெயி​லின் தாக்​கம் அதி​க​மா​கவே காணப்​பட்​டது.​ வெப்​பத்​து​டன் வியர்வை அதி​க​ரிப்​பும் உடல்​ந​லத்தை பெரி​தும் பாதிக்​கும் வகை​யில் அமைந்து விடு​கி​றது.​ காலை 6-30 மணி​யில் இருந்தே வெயி​லின் தாக்​கம் தொடங்கி விடு​கி​றது.​ இத​னால் காலை நேரத்​தில் நடைப்​ப​யிற்சி செல்​வோர்​கூட மிகுந்த பாதிப்​புக்கு உள்​ளா​யி​னர்.​ ​÷அ​திக வெப்​பம் கார​ண​மாக கட​லூர் வீதி​க​ளில் பகல் நேரத்​தில் மக்​கள் கூட்​டம் குறைந்து காணப்​பட்​டது.​ இரு​சக்​கர வாக​னங்​க​ளில் செல்​வோர் பலர் தொப்பி அணி​யத் தொடங்கி விட்​ட​னர்.​ பலர் ​ முகத்​தில் கைத்​துண்​டு​க​ளைக் கட்​டிக் கொண்​டும் பய​ணிப்​ப​தைப் பார்க்க முடி​கி​றது.​ ​வெப்​பத்​தின் தாக்​கம் அதி​க​ரித்து உள்ள நிலை​யில்,​​ தொடர்ந்து அதி​க​ரித்து வரும் மின்​வெட்டு,​​ மக்​களை மேலும் வாட்டி வதைப்​ப​தாக உள்​ளது.​ ​ கட​லூர் சில்​வர்​பீச்​சில் புதன்​கி​ழமை கூட்​டம் அதி​க​மா​கக் காணப்​பட்​டது.​ கட​லில் குளிக்க வேண்​டாம் என்ற காவல் துறை​யின் எச்​ச​ரிக்​கை​யை​யும் புறம் தள்​ளி​விட்டு,​​ பெரி​ய​வர்​கள் முதல் சிறி​ய​வர்​கள் வரை ஏரா​ள​மா​னோர் கட​லில் குளித்து மகிழ்ந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior