உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

கோடை விடு​மு​றை​யி​லேயே ​பள்ளி மாண​வர்​க​ளுக்கு இல​வச பாட நூல்​கள்

சிதம்​ப​ரம்:

                   அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​க​ளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயி​லும் அனைத்து மாணவ,​​ மாண​வி​க​ளுக்​கும் இல​வச ​ பாட நூல்​களை தமி​ழக அரசு வழங்கி வரு​கி​றது.​ இந்த கல்வி ஆண்​டுக்​கான பாடப் புத்​த​கங்​கள் பள்​ளி​க​ளில் தேர்வு முடி​வு​கள் வெளி​யி​டப்​பட்​ட​வு​டன் ​ அனை​வ​ருக்​கும் வழங்கப்​ப​டும் என கட​லூர் மாவட்ட முதன்மை கல்வி அலு​வ​லர் அமு​த​வள்ளி அறி​வித்​தார்.​ 

                       இ​த​ன​டிப்​ப​டை​யில் பள்ளி தேர்வு முடி​வு​கள் சனிக்​கி​ழமை வெளியிடப்பட்ட நிலை​யில் ​ சிதம்​ப​ரம் அரசு மேல்​நி​லைப் பள்ளி,​​ ராம​கிருஷ்ணாவித்யா​சாலை மேல்​நி​லைப் பள்ளி,​​ ஆறு​மு​க​நா​வ​லர் மேல்​நி​லைப் பள்ளி உள்​ளிட்ட அனைத்து பள்​ளி​க​ளி​லும் பாடப் புத்​த​கங்​கள் வழங்​கும் பணி தொடங்​கப்​பட்​டது.​ 1-ம் வகுப்பு மற்​றும் 6-ம் வகுப்​பு​க​ளுக்கு சமச்​சீர்​கல்வி பாடத்​திட்​டம் என்​ப​தால் அவர்​க​ளுக்கு புத்​த​கங்​கள் இன்​னும் வழங்​கப்​ப​ட​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​ பள்​ளி​கள் திறக்​கப்​ப​டும் முன் கோடை விடு​மு​றை​யி​லேயே புத்​த​கங்​கள் வழங்​கப்​பட்​ட​தால் மாணவ,​​ மாண​வி​கள் மிகுந்த ஆர்​வத்​து​டன் அவற்றை வாங்​கிச் சென்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior