உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

வாலாஜா வாய்க்காலில் சாக்கடை நீரில் கீரைகள் பார்த்தாலே 'உவ்வே...'

பண்ருட்டி : 

               திருவதிகை வாலாஜா வாய்க்காலில் சாக்கடை நீரில் கீரைகள் பயிரிட்டு வருவதால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

               கலப்படத்தில், போலியில் உண்டாகும் பாதிப்பை விட பண்ருட்டியில் கீரை வகைகள் பயிரிடும் இடத்தை பார்த்தாலே 'உவ்வே'... என சாப்பிட்டதும் வெளியே வரும் நிலை உள்ளது. பண்ருட்டி நகரத்தின் அனைத்து கழிவு நீர்களும் செல்லும் வாலாஜா வாய்க்கால் வி.ஆண்டிக் குப்பம் முதல் துவங்கி திருவதிகை கெடிலம் ஆறு வரை செல்கிறது. திருவதிகை பகுதியில் 100 மீட்டர் செல்லும் இந்த வாய்க்கால் கழிவு நீரில் 15 மீட்டர் தூரம் வரை விவசாயிகள் கீரை பயிரிட்டு வருகின்றனர்.

                 மேலும் வாய்க்காலை ஒட்டி மேல்புறத்திலும் கீர வகைகள் பயிரிடப்படுகிறது. இவற்றிற்கு கழிவுநீர் கால்நீர் கால்வாயில் ஓடும் நீரையே மோட்டார் மூலம் இரைத்து பயிரிட்டு வருகின்றனர். பொன்னாங்கன்னி, கரிசலாங்கன்னி, அரைகீரை, சிறுகீரை உள்ளிட்ட கீரைகள் வகைகள் பயிரிட்டு விற்கப்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் விளைவிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior