உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

நடுவீரப்பட்டில் இருக்கும் கட்டடங்களை விட்டு விட்டு மீண்டும் கட்ட இடம் தேர்வு

நடுவீரப்பட்டு : 

              சி.என்.பாளையம் ஊராட்சியில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நூலகம், அரசு நடுநிலைப் பள்ளி கழிவறை உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படாமல் மீண்டும் அதே கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு செய்து மக்கள் வரிப்பணத்தை அதிகாரிகள் பாழாக்கி வருகின்றனர்.

               பண்ருட்டி அடுத்த சி. என்.பாளையம் ஊராட்சி காலனியில் கடந்த 1996ம் ஆண்டு எம்.பி., நிதியில் நூலக கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப் பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறப்பு விழா நடத்தப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. அதேப்போன்று மழவராயநல்லூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முழு ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டப்பட்டது. இதன் மிக அருகிலேயே ஊராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால் கழிவறைக்கு தண்ணீர் இணைப்பு வழங்காததால் கழிவறையை ஆசிரிய, ஆசிரியைகள் பயன்படுத்த முடியாத நிலையில் கதவுகளையும் சமூக விரோதிகள் திருடி சென்று விட்டனர். மீண்டும் கடந்த 1999 - 2000ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் ரூபாயில் கழிவறை கட்டப்பட்டு அதுவும் பயன்படுத்த முடியாமல் பாழாகியது. இந்நிலையில் தற் போது மீண்டும் ஒரு கழிவறை கட்டப்பட்டு வருகிறது. கட்டடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா காணப்படாமலும், முறையாக பராமரிக்காமலும் வீணாகி வருவதும் மீண்டும் அதே போன்று கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து இடம் தேர்வு செய்வதும் என அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior