உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

கார் கடத்தல் வழக்கு: மூவர் கைது

பண்ருட்டி : 

               கார் டிரைவரை தாக்கி காரை கடத்திய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்தவர் கார் டிரைவர் புண்ணியகோடி (38). கடந்த ஏப். 22ம் தேதி இவரது மொபைல் போனுக்கு பேசிய ஒருவர் வடலூர் செல்ல வேண்டும் என அழைத்தார். கடலூர் லாரன்ஸ் ரோட்டில் போன் செய்த நபருடன் ஆறு பேர் ஏறினர். பண்ருட்டி அடுத்த சிலம்பிநாதன்பேட்டை அருகே சென்ற போது காரில் வந்தவர்கள் மது அருந்திவிட்டு புண்ணியகோடிக்கும் கொடுத்தனர். சிறிது தூரம் சென்றதும் புண்ணியகோடியை முந் திரி காட்டில் இறக்கி விட்டு மர்ம நபர்கள் காரை கடத்திச் சென்றனர். கார் உரிமையாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பனிக்கன்குப் பம் ஒயின்ஷாப்பில் மது அருந்த வந்த 3 பேரை காடாம்புலியூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் சென்னை அயனாவரம் விமல்ராஜ் (24), கள்ளிக்குப்பம் குமரேசன் (27), மன்னார்குடி தினேஷ் (24) எனவும், மூவரும் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கார் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior