உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

மக்கள் நல பணியாளரை தாக்கிய போலீஸ்காரர் உட்பட இரண்டு பேர் கைது

நெல்லிக்குப்பம் : 

             மக்கள் நல பணியாளரை தாக்கிய போலீஸ்காரர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

                அண்ணாகிராமம் அடுத்த எழுமேடு பகுதியில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வாய்க்கால் தூர் வாரும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் அபூர்வம் ஏகராசு மகன்கள் போலீஸ்காரர் சக்திவேல் மற்றும் புருஷோத்தமனும், மக்கள் நல பணியாளர் கடவுள் குமாரிடம் கூடுதல் ஆட்களை சேர்த்து 'தில்லு முல்லு' செய்த பணத்தை தரும்படி கேட்டனர். மறுத்ததால் அவரை தாக்கினர். இதுகுறித்து கடவுள் குமார் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து போலீஸ்காரர் சக்திவேல் மற்றும் புருஷோத்தமனை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior