உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

மின்வாரியத்தை முற்றுகையிட கடலூர் ஒன்றிய மா.கம்யூ., முடிவு

கடலூர் : 

            தொடர் மின் வெட்டை கண்டித்து நாளை 14ம் தேதி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட கடலூர் ஒன்றிய மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.

               மா.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் தட்சணாமூர்த்தி, உறுப்பினர்கள் தயாளன், நீலநாராயணன், அய்யாதுரை, பஞ்சாட் சரம், ஆறுமுகம், ராமர், மச்சகாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                விவசாயத்திற்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மின்மாற்றிகள் பழுதடைந்தால் உடனுக்குடன் மாற்றும் வகையில் போதிய அளவிற்கு மின் மாற்றிகள் தயார் நிலையில் வைத்திருக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிரிக்குப்பத்தில் மின் பழுதினை சரி செய்ய தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை வலியுறுத்தி நாளை 14ம் தேதி காலை கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior