உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

நெல்லிக்குப்பம் இ.ஐ. டி., பாரி சர்க்கரை ஆலையில் மண் பரிசோதனை மையம் திறப்பு

நெல்லிக்குப்பம் : 

              நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் மண் பரிசோதனை மையம் துவங்கப்பட்டது.

           நெல்லிக்குப்பம் இ.ஐ. டி., பாரி சர்க்கரை ஆலையில் மண் பரிசோதனை மையம் துவக்க விழா நடந்தது. துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மையத்தை முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி நிறுவன செயற்குழு உறுப்பினர் மகத்வராஜ் திறந்து வைத்தார். பொது மேலாளர்கள் பொன்னய்யன், துரைசாமி, மண்ணியல் நிபுணர் புஷ்பவள்ளி, கோட்ட மேலாளர் திருஞானம், பயற்சி அலுவலர் குருசாமி, விவசாய சங்கத் தலைவர் அருணாச்சலம் உட்பட பலர் பங்கேற்ற னர். குரோ மோட்டா கிராம் முறையில் மண் பரிசோதனை எளிய வழியில் துல்லியமாக நடைபெறும். 48 மணி நேரத்துக் குள் முடிவை பெறலாம். மண்பரிசோதனை முடிவின்படி தேவையான உரங்கள் அளிப்பதன் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior